மின் வாகனங்களாக மாறும் மத்திய, மாநில அரசு வாகனங்கள் – மத்திய அமைச்சர் கடிதம்!
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற கோரி மாநில முதல்வர்களுக்கு எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கடிதம் எழுதியுள்ளார்.
மின்சார வாகனம்:
இந்தியாவில் பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் இத்தகைய வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை மூலம் காற்று மாசடைகிறது. இதனை தடுக்கவும் மின்சார வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மின்சார வாகனங்களை அதிகம் மக்களை வாங்க வைக்கும் நோக்கில் மத்திய அரசு பேம் இந்தியா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த ஊக்கத்தொகையானது தற்போது 10,000 ரூபாயில் இருந்து ரூ.15,000 ஆக அதிகரித்துள்ளது.
கடைகளில் QR கோட் பயன்படுத்தும் உரிமையாளர்கள் கவனத்திற்கு – காவல்துறை எச்சரிக்கை!
இந்த வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் சேமிக்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் இதன் மூலம் நாடு முழுவதும் ஏராளமானோர் மின்சார வாகனங்களை வாங்கியுள்ளனர். மேலும் மின்சார வாகனங்களை வாங்க மக்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சொந்தமான வாகனங்கள் அனைத்தையும் மின் வாகனங்களாக மாற்றக்கோரி எரிசக்தி துறை அமைச்சர் மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதன் மூலம் அரசு மக்களுக்கு முன்மாதிரியாக அமையும் மின் வாகனங்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு தொடங்கியுள்ள ‘மின் எரிபொருளுக்கு’ மாறும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி விலையை குறைக்க நவீன பேட்டரி தயாரிப்புக்கு, உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.