தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் மீண்டுமாக எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
மாநிலம் முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நோய்த்தொற்று தாக்கம் ஏற்பட்ட போது, பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆன்லைன் பாடங்கள் மாணவர்களுக்கு உபயோகமானதாக இருந்ததா? என்றால் அது கேள்விக்குறி தான். ஏனென்றால் பல மாணவர்கள் ஆன்லைன் கல்வியில் விருப்பம் இல்லாதவர்களாகவும், பலருக்கு இன்டர்நெட் போன்ற வசதிகள் இல்லாத காரணத்தாலும் அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது.
மே 26 காலை 6 மணிவரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
அதனால் தற்போது அதிகரித்து வரும் கொரோனா 2ஆம் அலை காரணமாக பள்ளிகள் மீண்டுமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடுமோ என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்தும் அரசுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதே தனியார் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அந்த மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், வழக்கத்தின்படியே அந்த மாணவர்களுக்கு பள்ளி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் பல குடும்பங்களில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் பள்ளி கட்டணத்தை கொடுக்க முடியாமல் பல குடும்பங்கள் திணறி வருகிறது. அதனால் தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோரும் பள்ளிகள் திறப்பு குறித்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவிக்கையில், ‘தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையும் வரையிலும் பள்ளிகள் திறப்பு குறித்து சிந்திக்க இயலாது. மேலும் உலகளாவிய டெண்டர் மூலமாக சுமார் 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தும், தடுப்பூசிகளை விரைவாக செலுத்துவதாலும் இந்த பாதிப்பு கட்டுக்குள் வரும். அதன் பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என கூறியுள்ளார். மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Please refresh my memory