மே 26 காலை 6 மணிவரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஹிமாச்சல் பிரதேச மாநில அரசு ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவினை தற்போது மே 26ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் மே 24 வரை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 17ம் தேதி வரை அமலில் இருக்கும் என அரசு அறிவித்து இருந்தது. தற்போது அந்த உத்தரவினை நீட்டிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் கிராமங்களில் வீடு வீடாக பரிசோதனை – பிரதமர் அறிவுறுத்தல்!!
அதன்படி ஏற்கனவே மே 5, 6, 8 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் முழு ஊரடங்கு உத்தரவானது மே 17 காலை 6 மணி முதல், மே 26ம் தேதி காலை 6 மணிவரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருமண நிகழ்வுகளில் 20 பேருக்கு மிகாமல் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் கடைகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே மேற்குவங்க மாநிலத்தில் மே 30ம் தேதி வரையிலும், சட்டிஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் மே 31 வரையிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Tamilnadula edhukku himachala Pradesh oda news headline la?
Head line la thelivana news a podunga!