தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் முக்கிய பிரபலங்கள் உயிரிழக்கும் சோகம் நிகழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 31,800க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 288 பேர் இறந்துள்ளனர். இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் மே 24க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசுக்கு கோரிக்கை!!
இந்நிலையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளதால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். தற்போது 11 மாநிலங்களில் 1லட்சத்திற்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கர்நாடகா மாநிலத்தில் 5,98,625 பேர், மகாராஷ்டிராவில் 5,21,683 பேர், கேரளாவில் 4,42,550 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
8 மாநிலங்களில் 50000 அதிகமானோர் சிகிச்சை பெற்றும், 17 மாநிலங்களில் 50,000க்கு குறைவானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் மாநிலத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. நாட்டில் கடந்த வாரம் 21.9% ஆக இருந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 19.8% ஆக உள்ளது.