தமிழகம் முழுவதும் மே 24க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசுக்கு கோரிக்கை!!

0
தமிழகம் முழுவதும் மே 24க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு - அரசுக்கு கோரிக்கை!!
தமிழகம் முழுவதும் மே 24க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு - அரசுக்கு கோரிக்கை!!
தமிழகம் முழுவதும் மே 24க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசுக்கு கோரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில் மே 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள முழு ஊரடங்கு உத்தரவினை மேலும் நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முழு ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகம் முழுவதும் கடந்த வருட மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தொடக்கத்தில் பல்வேறு கடுமையாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. இதனால் மருத்துவ சேவைகள் தவிர பிற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வரிவசூல் குறைந்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியது.

பல்கலைக்கழக மானிய குழுவிற்கு முக்கிய அறிவிப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை தற்போது வேகமெடுக்க தொடங்கி உள்ளது. நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய கடைகள் தினசரி காலை 10 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் மே மாத இறுதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் மே 24ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இருப்பினும் தினசரி நோய் பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. பொதுமக்களும் ஊரடங்கு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் வெளியில் சுற்றுவதை பார்க்க முடிகிறது. இதனால் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவினை மே 24ம் தேதிக்கு பின்னரும் நீட்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தேசிய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!