மே 16 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில கல்வித்துறை அறிவிப்பு!
கார்நாகாவில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வின் முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து மீண்டும் பள்ளிகள் 16ம் தேதி திறக்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளாலும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களுக்கு கல்வி பாதிப்படையக் கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக தினசரி வகுப்புகள் நடைபெற்றது. ஆண்டுதோறும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வு தொற்று அச்சத்தால் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது. அடுத்தடுத்து பரவிய கொரோனா இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைகள் பள்ளிகள் திறப்பை மேலும் தாமதமாக்கியது.
IT நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? நடப்பு நிதியாண்டில் 1 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு!
அதன் பிறகு எடுக்கப்பட்ட அரசின் தொடர் முயற்சியால் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனால் மாநில பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 28ம் தேதி தொடங்கியது.
Exams Daily Mobile App Download
ஏப்ரல் 11ம் தேதி வரை இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை அம்மாநிலத்தில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 19ம் தேதி தேர்வின் முடிவுகள் வெளியாகும் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் 16ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.