தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை திறந்து வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் தொடக்க நிலை மாணவர்களின் கல்வி நிலை கேள்வியாக உள்ளது. தொடக்க நிலை வகுப்பு மாணவர்கள் எழுத்துகளை மறக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
டாப் 100 இந்திய பணக்காரர்களின் பட்டியலில் ஆறு பெண் தொழிலதிபர்கள் – ஃபோர்ப்ஸ் வெளியீடு!
இவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு 1 – 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக அனைவரது கருத்துக்களும் ஆராயப்பட்டு கலந்தாலோசனைக்கு பிறகு வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி1 – 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அக்.9ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
அதில் தமிழகத்தில் கடந்த 5 ஆம் தேதி காலை 4 மணியில் இருந்து வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகிறது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை கருத்தில் கொண்டு தவிர்க்கும் வகையில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அரசாணையில் தெரிவித்துள்ளார்.