10 & 12ம் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
கொரோனா பரவல் குறைந்துள்ளதால்scho 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. தற்போது இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில் தற்போதைய கல்வி ஆண்டிற்கான இணைய வகுப்புகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றன. மாணவர் சேர்க்கை, ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் வாரிய தேர்வுகள் தொடர்பான தினசரி நடவடிக்கைகளுக்காக பின்பற்றப்பட வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) டெல்லி அரசு வகுத்து வருகிறது.
தமிழகத்தில் தொடக்க கல்வி பட்டயத்தேர்வு விண்ணப்ப பதிவு – ஆகஸ்ட் 12 கடைசி நாள்!
கொரோனாவின் வீரியம் தற்போது குறைந்துள்ளதால் பள்ளிகளை திறந்து நேரடியாக வகுப்புகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பொதுத்தேர்வையும், ஆன்லைன் வசதியால் கல்வி கற்க முடியாதவரையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.
TN Job “FB Group” Join Now
மேலும், சுழற்சி முறையில் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆசிரியர்களின் வருகையும் குறித்து இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
வழிகாட்டு நெறிமுறைகள்
- அரசு உத்தரவின் படி, கோவிட் அறிகுறி உள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- பள்ளி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட வேண்டும்.
- இதோடு சேர்த்து முகக்கவசம் அணிந்து, சானிடைசர் கொண்டு கைகளையும் சுத்தப்படுத்தபட்ட பின்பு தான் அவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தனி நபர் இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.