மீண்டும் பள்ளிகள் மூடல்? மாநில அரசு விளக்கம்! ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு!
மாநிலம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் வழக்குகள் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தால் பள்ளிகள் மீண்டுமாக மூடப்படும் என்று மஹாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தகவல் அளித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்
இந்தியாவில் கொரோனா 2ம் அலைப்பரவல் ஓய்ந்து வந்ததையடுத்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் கழித்து டிச.15ம் தேதியன்று 1 முதல் 7ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கியது. இதற்கிடையில் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு வழக்குகள் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தால் பள்ளிகளை மூடுவதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தகவல் அளித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – மது, மாமிசம் உண்ணலாமா? அமைச்சர் விளக்கம்!
அதாவது இந்தியாவில் கடந்த மாதம் முதல் பதிவு செய்யப்பட்டு வரும் ஒமிக்ரான் வைரஸ் வழக்குகள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை இம்மாநிலத்தில் மட்டும் மொத்தம் 54 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. குறிப்பாக நேற்று (டிச.21) ஒரே நாளில் மட்டும் 11 பேர் இந்த ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக நேர்மறையாக பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மாநிலங்களுக்கான மொத்த பாதிப்பில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வந்தால், பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘மஹாராஷ்டிராவில் ஒமிக்ரான் பரவலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்தால் பள்ளிகள் மீண்டும் மூடப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.