கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – மது, மாமிசம் உண்ணலாமா? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் மற்றும் மதுபானங்கள் எடுத்துக்கொள்ள கூடாது என்பது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனாவை கட்டுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால் தமிழகத்தில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் பரிசோதனைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளவர்களுக்கு குறைந்த அளவில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து ஊழியர்களுக்கும் 2022 இல் காத்திருக்கும் ஜாக்பாட் – 9% சம்பள உயர்வு! ஆய்வு முடிவுகள்!
அதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்ற வகையில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. எனினும் தமிழகத்தில் மதுரை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழகத்தில் 1 டோஸை 84% பேரும், 2 டோஸை 55.01% பேரும் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளது வருத்தத்தை அளிப்பதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மதுபானம் மற்றும் இறைச்சி உணவுகளை உண்ணக்கூடாது என்று வதந்தி பரவி வருகிறது. அதனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை அன்று சனிக்கிழமைகளில் நடைபெற இருந்த தடுப்பூசி முகாம்கள் அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது. அதாவது வரும் டிச.25ம் தேதி நடக்கவிருந்த தடுப்பூசி முகாம் டிச.26ம் தேதியும், ஜன.1ம் தேதி நடைபெறவிருந்த தடுப்பூசி முகாம் ஜன.2ம் தேதியும் நடைபெற உள்ளது. எனவே அனைவரும் 2 தவணை தடுப்பூசியையும் கட்டாயம் செலுத்திக் கொள்ளுமாறு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.