தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு – 95% பெற்றோர்கள் சம்மதம்!!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பள்ளிகளை திறப்பதற்கு மாவட்ட வாரியாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மதுரையில் 95% பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பின்னர் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் அந்தந்த மாநிலங்களில் உள்ள நிலவரத்தை பொறுத்து பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அனுமதி வழங்கியது. அதன்படி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, அசாம் என பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.
‘ஆன்லைனில்’ அரசுப்பணியாளர் குரூப் தேர்வுகள் – மாநில அரசு திட்டம்!!
தமிழகத்தில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்து விட்டதால் விரைந்து பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மே மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு – தமிழக அரசு பரிசீலனை!!
அதற்காக கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 539 பள்ளிகளில் கடந்த இரு நாட்களாக கூட்டம் நடைபெற்றது. அதில் பெற்றோரிடம் பள்ளிகள் திறக்கும் முடிவை ஏற்கிறேன் அல்லது ஏற்கவில்லை என்ற பதில் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டது. இதில் அதிகப்படியான பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் (95 சதவீதம்) பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்