‘ஆன்லைனில்’ அரசுப்பணியாளர் குரூப் தேர்வுகள் – மாநில அரசு திட்டம்!!

0
'ஆன்லைனில்' அரசுப்பணியாளர் குரூப் தேர்வுகள் - மாநில அரசு திட்டம்!!
'ஆன்லைனில்' அரசுப்பணியாளர் குரூப் தேர்வுகள் - மாநில அரசு திட்டம்!!
‘ஆன்லைனில்’ அரசுப்பணியாளர் குரூப் தேர்வுகள் – மாநில அரசு திட்டம்!!

ஆந்திர அரசுப்பணியாளர் தேர்வாணையம் (APPSC) சார்பில் நடத்தப்படும் குரூப் தேர்வுகளை முற்றிலும் டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் முற்றிலுமாக தடுக்கப்படும் என கூறப்படுகிறது.

அரசுப்பணியாளர் தேர்வுகள்:

தமிழகத்தில் TNPSC (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) சார்பில் பல்வேறு அரசுத்துறைகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதேபோல் ஆந்திராவில் APPSC எனும் ஆந்திர அரசுப்பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இதே முறையில் அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுகளில் பின்பற்ற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

அரசின் உத்தரவை மீறி நேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் – உயர்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை!!

அதன்படி குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 3 என அனைத்து அரசுப்பணியாளர் தேர்வுகளையும் ஆன்லைன் முறையில் நடத்த APPSC முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக APPSC செயலர் தெரிவித்ததாவது, அரசுப்பணியாளர் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தும் செயல்முறை குறித்து ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களிடம் விபரங்கள் பெறப்பட்டது. தற்போது அதனை பின்பற்றி காகிதம் இல்லாமல் தேர்வாணையத்தின் முழு செயல்முறைகள் மற்றும் தேர்வுகளை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மே மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு – தமிழக அரசு பரிசீலனை!!

இதற்காக ஆப்ஜெக்ட்டிவ் வித வினாக்களுக்காக ஓஎம்ஆர் வினாத்தாள்கள் பயன்படுத்தப்பட்டு அவை ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றப்பட வேண்டும். பின்னர் அவை ஆன்லைன் மூலம் மதிப்பீடு செய்யப்படும். இது முற்றிலும் வெளிப்படையான செயல்முறை என்பதால் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும். தேர்வாணைய பணியாளர்களின் சுமை குறையும், மேலும் நோய்த்தொற்று பயமின்றி தேர்வுகளில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

அரசின் உத்தரவை மீறி நேரடி வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் – உயர்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமும் இதே முறையை பின்பற்ற பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் காலங்களில் அனைத்து செயல்முறைகளும் ஆன்லைன் மூலம் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!