பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதிகள் – மாநில அரசுகள் அறிவிப்பு!!
கொரோனா பரவல் எதிரொலி காரணமாக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் மார்ச் 31ம் தேதி முதல் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கிற்கு பின்னர் கொரோனா தொற்று சற்று குறையத் தொடங்கியது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை மெல்ல திரும்பும் சூழல் நிலவியது. கொரோனா குறையத் தொடங்கியதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்லத்தொடங்கினர்.
தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து – அரசாணை வெளியீடு!!
தொற்று அதிகரிப்பு:
நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்பட தொடங்கியது. இந்நிலையில் திடீரென்று நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வந்தது. நாளுக்கு நாள் தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.
கல்வி நிறுவனங்கள்:
தொற்று அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக, சட்டிஸ்கர், தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி ஏதும் குறிப்பிடாமல் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரி, பஞ்சாப், சண்டிகர்,உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் மார்ச் 31ம் தேதியும், குஜராத் மாநிலத்தில் ஏப்ரல் 10ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்