நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் பாரத் நெட் மூலம் இணைப்பு – மத்திய அரசு தகவல்!!
நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
பாரத் நெட்:
நாடு முழுவதும் சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை அதிவேக ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை மூலம் இணைப்பதற்காக மத்திய அரசு ‘பாரத் நெட்’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 6.25 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. பாரத் நெட் திட்டம் நிறைவேறினால் கேபிள் டிவி நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சம் தமிழக மக்கள் மத்தியில் உள்ளது.
மத்திய அரசுத்துறைகளில் 10 லட்சம் காலிப்பணியிடங்கள் – அரசு விளக்கம்!!
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் நடத்திய ஆலோசனையில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஊரக பகுதிகளில் இணையதள இணைப்பை ஏற்படுத்த மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சிஎஸ்சி இந்திய இ-நிர்வாக சேவைகள் நிறுவனம் (CSC-SPV) மூலம் பள்ளிகள் உள்பட அரசு நிறுவனங்களுக்கு கண்ணாடியிழை கேபிள் இணைப்பு வழங்கப்படுகிறது. கிராம பஞ்சாயத்துகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இணையதள இணைப்பு வழங்குவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.