பள்ளி மாணவர்களுக்கு ஜன. 15 வரை தொடர் விடுமுறை – வட மாநிலங்களில் உறைய வைக்கும் பனி எதிரொலி!

0
பள்ளி மாணவர்களுக்கு ஜன. 15 வரை தொடர் விடுமுறை - வட மாநிலங்களில் உறைய வைக்கும் பனி எதிரொலி!
பள்ளி மாணவர்களுக்கு ஜன. 15 வரை தொடர் விடுமுறை - வட மாநிலங்களில் உறைய வைக்கும் பனி எதிரொலி!
பள்ளி மாணவர்களுக்கு ஜன. 15 வரை தொடர் விடுமுறை – வட மாநிலங்களில் உறைய வைக்கும் பனி எதிரொலி!

தற்போதைய சூழலில் இந்தியாவில் டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

விடுமுறை:

இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் காலநிலை மாற்றம் காரணமாக பனிபொழிவு, குளிர் அதிக அளவில் இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டு இது வரை இல்லாத அளவு குளிர் நிலவுகிறது. மேலும் காலை நேரங்களில் சூலும் பனி மூட்டத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் ஜன.11 அறிவிக்கப்பட்ட மின்தடை – இதோ முழு விவரம்!!

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது காலை நேரங்களில் 2 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது.

இந்த நேரத்தில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு வட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வுக்கு விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கடும் குளிர் காரணமாக டெல்லியில் ஜன. 15ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஜார்கண்ட் மாநிலத்தில் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜன. 14ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்கள் உள்ளூர் விடுமுறைகளையும் அறிவித்து வருகின்றன.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!