தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் முடிந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்றும், இந்த காலத்தில் பள்ளிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், கோவை மாவட்டம் வால்பாறையில் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் உள்ள ஊராட்சி நடுநிலைப்பள்ளி, நல்லகாத்து பகுதியில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளி, வால்பாறையில் உள்ள பழங்குடியின குழந்தைகள் பயிலும் உண்டு உறைவிட பள்ளி, ரொட்டிக்கடை பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள அடிப்படை வசதிகள் பற்றி நேற்று ஆய்வு செய்தார்.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வீடு தேடி வரும் சேவை!
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில், மலைப்பிரதேசங்களில் உள்ள பள்ளிகளின் நிலை குறித்தும்,அங்கு வழங்கப்படும் கல்வியின் தரம், அதற்கு தேவையான வசதிகளை குறித்தும் இந்த பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார். மேலும், கோவையில் உள்ள கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், பணியாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன் முடிவில், மலைப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம், பேருந்து வசதி இல்லாமை போன்ற காரணங்களால் குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாத சூழல் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். கொரோனா முடிந்த பிறகு தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். மேலும், அதுவரையிலும், கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்றல் பணிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Super