ஜனவரி 24ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு ஒப்புதல்!
மகாராஷ்டிரா அரசு கொரோனா பாதிப்புகள் மாநிலத்தில் குறைந்து வருவதால் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அதன்படி ஜனவரி 24ம் தேதி முதல் மீண்டும் அனைத்து வகுப்புகளும் நேரடி முறையில் பள்ளிக்கு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா வைரஸின் 3ம் அலை பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை விரைவில் எட்டியது. அதன்படி ஜனவரி 3ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. ஆனால் கடந்த வாரம் முதல் மாநிலத்தின் பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியது. மும்பையில் புதன்கிழமை 6032 பேருக்கு தொற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் மீண்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனால் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான ஆலோசனையை மாநில அரசு நடத்தியது.
IND vs SA 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன? ரிஷப் பண்ட் பேட்டி!
அதன்படி ஜனவரி 24ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கொரோனா பரவல் நிலைமை மாவட்டத்தில் எப்படி உள்ளது என்பதை பொறுத்து பள்ளிகளை திறக்கும் முடிவை மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வெளியிட்டார். இந்நிலையில், மும்பை நகரில் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஜன.23ம் தேதி ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து? அரசுக்கு கோரிக்கை!
இதற்கான புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் நேற்று அரசால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஆதித்யா தாக்கரே தனது டிவீட்டரில், மாநில அரசு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியதை அடுத்து வரும் திங்கட்கிழமையான ஜனவரி 24ம் தேதி முதல் மும்பை நகரில் பள்ளிகளில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாணவர்கள் அரசின் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் முகக்கவசங்களை அணிந்து வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.