தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள்! ஓமைக்ரான் எதிரொலி!

0
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள்! ஓமைக்ரான் எதிரொலி!
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள்! ஓமைக்ரான் எதிரொலி!
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள்! ஓமைக்ரான் எதிரொலி!

தமிழகத்தை சுற்றிலும் உள்ள அண்டை மாநிலங்களில் புதிய வகை ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் சுழற்சி முறை வகுப்புகளே அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுழற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் கடந்த 2021 மார்ச் மாதம் முதல் மிகவும் அதிக வேகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. முன்னதாக முதல் அலை பாதிப்புகள் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பரவி வந்தது. இதனால் கடந்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் நேரடியாக செயல்படாமல் இருந்து வந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது. தொடர்ந்து அரசு விதித்து வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் தமிழகத்தில் குறைந்து வந்தது.

மாநில அரசு ஊழியர்களுக்கு டிச.24ம் தேதி விடுமுறை அறிவிப்பு – உத்தரவு பிறப்பிப்பு!

இதனால் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் அதன் விளைவின் அடிப்படையில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் நேரடியாக திறக்கப்பட்டது. ஆனால் மாணவர்களின் நலன் கருதி வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படுகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா முற்றிலும் கட்டுக்குள் வந்துள்ளதால் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் சுழற்சி முறை இல்லாமல் வழக்கம் போல் செயல்பட வாய்ப்புகள் உள்ளதாக அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

தமிழக Post office இல் ஆயுள் காப்பீடு முகவர் வேலை, 10ம் வகுப்பு போதும் – டிச.27ம் தேதி கடைசி நாள்!

ஆனால் கொரோனா தொற்றின் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்று தமிழகத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலங்களில் அதிக அளவில் பரவி வருகிறது. மத்திய அரசும் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், அனைத்து மாநில அரசுகளையும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் மீண்டும் பள்ளி, கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகள் தான் நடக்க வாய்ப்புள்ளதாகவும், பள்ளிக்கல்வித்துறை இது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!