தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் திறப்பு – குஷியில் மாணவர்கள்!

0
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் திறப்பு - குஷியில் மாணவர்கள்!
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் திறப்பு - குஷியில் மாணவர்கள்!
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் திறப்பு – குஷியில் மாணவர்கள்!

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளி திறக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பு:

தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்.23 ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், காலாண்டு விடுமுறை முடிவடைந்து அக்.3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக 5 நாட்கள் என்கிற கணக்கில் அக்.8 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – அமலாகும் புதிய மாற்றம்! ஷாக் அப்டேட்!

ஏற்கனவே, 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நேற்றுடன் காலாண்டு விடுமுறை முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு கிளம்பியுள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!