தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் திறப்பு – குஷியில் மாணவர்கள்!
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
பள்ளி திறப்பு:
தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்.23 ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், காலாண்டு விடுமுறை முடிவடைந்து அக்.3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக 5 நாட்கள் என்கிற கணக்கில் அக்.8 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – அமலாகும் புதிய மாற்றம்! ஷாக் அப்டேட்!
ஏற்கனவே, 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நேற்றுடன் காலாண்டு விடுமுறை முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு கிளம்பியுள்ளனர்.