தமிழகத்தில் நாளை ‘இந்த’ மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான சூப்பரான அறிவிப்பு!
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் விதமாக நாளை வேலை நாளாக செயல்பட அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வுக்கான ஆயத்த பணிகள் நடைபெற இருப்பதால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் பருவமழை காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் வேலை நாளாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை சென்னை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.
இராணுவ பணிக்கான ஆட்கள் சேர்ப்பு – இந்த 2 மொழிகளில் மட்டுமே தேர்வு.. அதிர்ச்சியில் விண்ணப்பதாரர்கள்!
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகள் நாளை திங்கட்கிழமை பாட வேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், வருகிற 13ம் தேதி அன்று (திங்கட்கிழமை) 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அதனால் மாவட்டத்தில் பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்களில் தேவையான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் இதற்கு முன்பு பிறப்பித்துள்ள உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download