இராணுவ பணிக்கான ஆட்கள் சேர்ப்பு – இந்த 2 மொழிகளில் மட்டுமே தேர்வு.. அதிர்ச்சியில் விண்ணப்பதாரர்கள்!
தமிழகத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள்சேர்ப்பு பணிகள் தொடங்கியுள்ளது. நடப்பு ஆண்டு இராணுவத்திற்கு எழுத்து தேர்வு வாயிலாக ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத்தேர்வு:
தமிழகத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023 – 2024 ம் ஆண்டுக்கான இராணுவ பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு தொடங்கி, தற்போது விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத்தேர்வு கணினி வழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் காய்ச்சல் பாதிப்பு மார்ச் மாத இறுதியில் குறைய வாய்ப்பு – மத்திய அரசு கணிப்பு!
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, வேலூர், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம் என 7 இடங்களில் இணையவழி தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடைபெறும் என்று ராணுவ ஆள்சேர்ப்பு பிரிவு இயக்குனர் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் தமிழக கிராமப்புற மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் தகுதித்தேர்வு நடைபெறும். 3ம் கட்டமாக விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இணைய வழியில் தேர்வை எவ்வாறு எழுவது என்பது தொடர்பான வீடியோக்கள் அதிகாரபூர்வ தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download