கனமழை விடுமுறையிலும் தனியார் பள்ளிகள் இயக்கம் – பெற்றோர்கள் புகார்!!
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டும் சில தனியார் பள்ளிகள் இயங்குவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விடுமுறை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டும் பல்வேறு தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றனர். இதனால், மாணவர்கள் கடும் மழையிலும் விடுமுறை அறிவித்தும் கூட கடும் சிரமத்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர். இதனால், மழையின் போது கூட மாணவர்களின் நலனில் அக்கறை காட்டாமல் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.