வாட்டி வதைக்கும் குளிர்.. பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நீட்டிப்பு – உத்தரவை வெளியிட்ட பீகார்!

0
வாட்டி வதைக்கும் குளிர்.. பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நீட்டிப்பு - உத்தரவை வெளியிட்ட பீகார்!
வாட்டி வதைக்கும் குளிர்.. பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நீட்டிப்பு - உத்தரவை வெளியிட்ட பீகார்!
வாட்டி வதைக்கும் குளிர்.. பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நீட்டிப்பு – உத்தரவை வெளியிட்ட பீகார்!

இந்தியாவில் நடப்பு ஆண்டு வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பீகாரில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விடுமுறையானது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

விடுமுறை:

இந்தியா முழுவதும் கடந்த நவம்பர் மாதம் முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த குளிரால் உத்திர பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலவும் கடும் குளிரால் அம்மாநில மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழக மக்கள் கவனத்திற்கு.. இனி ரேஷன் கடை பொருட்கள் விநியோகம் இந்த முறையில் தான் – அமைச்சர் விளக்கம்!

Follow our Instagram for more Latest Updates

காலை நேரங்களில் பனிமூட்டம் சூழ்வதால் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய கால நிலையை கருத்தில் கொண்டு பல மாநில அரசுகள் பள்ளிகளுக்கு விடுமுறையை அளித்துள்ளது. மேலும் அரையாண்டு தேர்வுக்கு பிறகு தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது வரை பனி முற்றிலும் குறையாத நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறையானது நீட்டிக்கப்பட்டும் வருகிறது.

அந்த வகையில் பீகார் மாநிலத்தில் சில பகுதிகளில் ஜனவரி 14 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை பனியின் காரணமாக ஜனவரி 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அம்மாநிலத்தின் பாட்னா, சமஸ்டிப்பூர் மற்றும் முசாபர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜன. 14 வரை விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!