தமிழக மக்கள் கவனத்திற்கு.. இனி ரேஷன் கடை பொருட்கள் விநியோகம் இந்த முறையில் தான் – அமைச்சர் விளக்கம்!

0
தமிழக மக்கள் கவனத்திற்கு.. இனி ரேஷன் கடை பொருட்கள் விநியோகம் இந்த முறையில் தான் - அமைச்சர் விளக்கம்!
தமிழக மக்கள் கவனத்திற்கு.. இனி ரேஷன் கடை பொருட்கள் விநியோகம் இந்த முறையில் தான் - அமைச்சர் விளக்கம்!
தமிழக மக்கள் கவனத்திற்கு.. இனி ரேஷன் கடை பொருட்கள் விநியோகம் இந்த முறையில் தான் – அமைச்சர் விளக்கம்!

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இனி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் பாக்கெட்டுகளில் விநியோகம் செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

ரேஷன் பொருட்கள்:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2023ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையின் முதல் நாள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஆரம்பித்தது. அதன்பிறகு, அனைத்து துறைகளையும் சேர்ந்த அமைச்சர்கள் துறைவாரியாக தங்களின் துறை சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய சட்டமன்றத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் செய்வது குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

குடும்ப தலைவிகளுக்கு சூப்பர் செய்தி.. மாதம் ரூ. 1000 உதவித்தொகை – புதுச்சேரி ஆளுநர் அளித்த ஒப்புதல்!

அதன்படி, இனி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகம் செய்வதற்கு முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும், மேலும், கைரேகை மூலம் பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு மூலமாக கைரேகை பதிவை சரியாக அளிக்க முடியாத முதியவர்கள் பலர் பலனடைவார்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!