குழந்தைகளை தாக்கும் இன்புளுயன்சா காய்ச்சல் – பள்ளிகளுக்கு விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் குழந்தைகளுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
விடுமுறை:
தமிழகத்தில் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக இன்புளுயன்சா காய்ச்சல் தீவிரமெடுத்து பரவி வருகிறது. காய்ச்சல் இருமல், சளி, தொண்டை வறட்சி, உடல் சோர்வு ஆகியவை இந்த இன்புளுயன்சா காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நோயானது எளிதாக மற்றவருக்கு பரவ கூடியது. அதாவது நோய் பாதிக்கப்பட்டவர் இருமும் போதும் தும்மும் போதும் வெளிப்படும் நீர் துளிகள் வழியாக மற்றவருக்கு எளிதாக இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது.
குறிப்பாக குழந்தைகள் அதிகம் இன்புளுயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 1044 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வித்துறை அதிரடி ஆணை!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த இன்புளுயன்சா காய்ச்சல் காற்றின் மூலம் விரைவாக பரவுகிறது. இந்த நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் வாயிலாக வகுப்பில் பயிலும் மற்ற குழந்தைகளுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் அரசு பள்ளி குழந்தைகள் உடல் நலனில் விளையாட வேண்டாம் என்றும் மாணவர்கள் மீது அக்கறை கொண்டு அலட்சியம் காட்டாமல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் வலியுறுத்தியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்