தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – கல்வித்துறை அதிரடி ஆணை!
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இதில் தலைமை ஆசிரியர்கள் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
கிராம சபை
தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு 6 நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். அதாவது இந்தியக் குடியரசு நாள் (ஜனவரி 26), தொழிலாளர் நாள் (மே 1), இந்திய விடுதலை நாள், (ஆகஸ்டு 15) காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) உள்ளிட்ட 6 நாட்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இதனை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடத்துவார்கள். அதன்படி தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வருகிற அக்டோபர் 2 நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர், உறுப்பினர்களும் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் கற்றல், கற்பித்தல் உள்ளிட்டவை தொடர்பாக விவாதங்களை மேற்கொள்ள வேண்டும்.
செப்.20 தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் – மின்வாரிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அத்துடன் மாணவர்களிடையே இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, கற்றல், கற்பித்தல், பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வருகிற 28ம் தேதி அன்று நடைபெறவுள்ள பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மேற்காணும் வழிமுறைகளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டுமென முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்