பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூன் 15 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூன் 15 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூன் 15 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூன் 15 வரை கோடை விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களுக்கான கோடை விடுமுறை வரும் ஜூன் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை நீட்டிப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாநில அரசுகள் பலத்த கட்டுப்பாடுகளை மாநிலம் முழுவதும் விதித்து வருகின்றது. தீவிர நடவடிக்கைகளுக்கு பின்னர் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே கடந்த சில நாட்களாக தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. பல மாநிலங்கள் தொற்றின் பிடியில் இருந்து இன்னும் மீளவில்லை.

மத்திய அரசு ஊழியர்களுக்கு PF அதிகரிப்பு – 7வது சம்பள கமிஷன்!!

தெலுங்கானா மாநில அரசு நோய் தொற்று கட்டுப்பாடு நடவடிக்கையாக மாநிலத்தில் கடந்த மாதம் முதல் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியது. அதற்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஏப்ரல் 31ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறையை அரசு அறிவித்தது.

TN Job “FB  Group” Join Now

தற்போது கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை மேலும் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பள்ளி கல்வி இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவின்படி, 2021 ஜூன் 15ம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் DIET (மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி கல்லூரிகள்) கோடை விடுமுறையை நீட்டிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!