பீகாரில் அடுத்த வாரம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
பீகாரில் கொரோனா புதிய பாதிப்புகள் தொடர்ச்சியாக சரிந்து வரும் நிலையில், அடுத்த வாரம் முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
கல்வி நிறுவனங்கள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் பீகார் மாநிலத்தில் வரும் வாரம் முதல் பள்ளிகளை மீண்டுமாக திறக்க அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக அங்கு நேற்று (ஜூலை 5) நடைபெற்ற பேரிடர் மேலாண்மை குழுவின் கூட்டத்தில், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகளை வழங்க முடிவு செய்யப்பட்டது.
உத்தரகண்டில் ஜூலை 13 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் அமல்!
அந்த வகையில் மாவட்டங்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் தளர்வுகளில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் 50% வருகையுடன் திறக்கப்பட உள்ளதாக முதல்வர் நிதீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவற்றில் கல்லூரி மற்றும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த மாநில அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன் படி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், அரசு பயிற்சி நிறுவனங்கள், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் 50% வருகையுடன் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரிக்காத பட்சத்தில் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு 2 ஆம் கட்டமாகவும், தொடக்கநிலை முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் கட்டமாக பள்ளிகளை துவங்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Be safety all people are mask potu ponga friends