ஜூலை 31 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் – புனே நிர்வாகம் அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஜூலை 31ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது எனவும் கற்பித்தல் பணிகள் ஆன்லைன் வழியாக நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
பள்ளிகள் மூடல்:
கொரோனா 2 ஆம் அலை பாதிப்பானது நாடு முழுவதும் வெகுவாக குறைந்திருக்கும் பட்சத்தில் மஹராஷ்டிரா மாநில அரசு பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதாக அறிவித்தது. அதாவது கடந்த 2 மாதங்கள் கழித்து கொரோனா புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வராத கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்தது. அந்த வகையில் ஜூலை 15 ஆம் தேதிக்கு மேல் கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அரசு நடவடிக்கை!
இந்நிலையில் ஜூலை 31 ஆம் தேதி வரை புனேயில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று புனே மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக புனே நகராட்சி ஆணையர் விக்ரம் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘ஜூலை 31ஆம் தேதி வரை புனே மாநகரத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நேரடி கற்பித்தல் பணிகள் நிறுத்தப்பட்டு, கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
TN Job “FB Group” Join Now
மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வழியாக மட்டுமே கற்பித்தல் பணிகள் அனுமதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது புனே நகரில் கொரோனா நிலைமை குறித்து துணை முதல்வர் அஜித் பவார் இன்று (ஜூலை 17) ஆலோசனை செய்யவுள்ள நிலையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் மேலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புனே மாநகரத்தில் வார இறுதி முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், அத்தியாவசிய கடைகள் அனைத்தும் மாலை 4 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.