தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தேனி மாவட்டம் கண்ணகி கோயிலில் சித்திரை பௌர்ணமி விழாவை முன்னிட்டு ஏப்ரல் 16ம் தேதி அம்மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலர்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள திருத்தலங்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாகளை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர் விடுறையை அறிவித்து வருகிறது. ஏனெனில் இப்பண்டிகைகளில் அம்மாவடட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மற்றும் மற்ற மாநில மக்களும் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 15ம் தேதி திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயில் நடப்பாண்டு தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நிகழ்வர் முன்னிட்டு ஏப்ரல் 16ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டம் கண்ணகி கோயிலில் சித்திரை பௌர்ணமி விழாவை முன்னிட்டு ஏப்ரல் 16ம் தேதி (சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதனையடுத்து முன்னிட்டு தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மாவட்ட கருவூல அலுவலகம் மற்றும் சாா்நிலை கருவூல அலுவலகங்கள் மட்டும் செயல்படும். இந்த உள்ளூா் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் மே மாதம் 7 ஆம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.