இந்திய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் சார்பாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய மனிதவள துறை சார்பாக உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை:
இந்தியாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில கூடிய ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பாக கல்விக்கு உதவும் வகையில் மாதந்தோறும் அல்லது வருடாந்திர அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகைகள் மூலம் மாணவர்கள் இடை நிற்றல் இன்றி கல்வியை தொடர்ந்து வருகிறது. இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் பணம் பெற சில நிபந்தனைகள் உள்ளது. அதனடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 1% பேருக்கு கூட கிடைக்காத மத்திய அரசு வேலை – அதிர்ச்சி தகவல் வெளியீடு!
அதனை தொடர்ந்து மத்திய மனிதவள துறையின் சார்பாகவும் பியூசி 2 ஆம் ஆண்டு தோ்வில் 80% அதிகமாக மதிப்பெண் பெற்று உயா்கல்வி பயின்று வரும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறை மூலமாக கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கல்வி உதவித்தொகையை தொடர்ந்து பெற விண்ணப்பங்களை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்கள் உதவித்தொகை பெற உரிய ஆவணங்களுடன் அக்டோபர் 31ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
Exams Daily Mobile App Download![](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/03/tet-ad.jpg)
மேலும், மனிதவள மேம்பாட்டு துறை கல்வி உதவித்தொகை, ஒருங்கிணைப்பு அதிகாரி, அறை எண்:302, மூன்றாவது தளம் பியூ கல்வித்துறை 18 வது குறுக்குத்தெரு, மல்லேஸ்வரம், பெங்களூர்-12 என்ற முகவரியில் விண்ணப்பங்களை அளிக்கலாம். இது குறித்த விவரங்களை காணொளி காட்சியாக காண இணையதளத்தில் காணலாம். மேலும் விண்ணப்பங்களை இணையதளம் மூலமும் அக்டோபர் 31-ஆம் தேதி ஒப்படைக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 080 – 23311330 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.