தமிழக அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தோர் கவனத்திற்கு – ரூ.3000 வரை உதவித்தொகை!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தோர் கவனத்திற்கு - ரூ.3000 வரை உதவித்தொகை!
தமிழக அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தோர் கவனத்திற்கு - ரூ.3000 வரை உதவித்தொகை!
தமிழக அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தோர் கவனத்திற்கு – ரூ.3000 வரை உதவித்தொகை!

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2021 செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் குறைந்தபட்சம் 5 ஆண்டு நிறைவானவர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உதவித்தொகை:

தமிழகத்தில் அரசு பணிகளில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம். இப்பதிவு செய்வதன் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்படுகிறது. பதிவு செய்தும் ஏராளமானோர் வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது அரசு பணிகள் பெரும்பாலும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகிறது. அதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து அதை புதுப்பித்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு சார்பாக மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

புதிதாக வீடு கட்ட திட்டமிடுவோர் கவனத்திற்கு – வீட்டுக்கடன் வட்டி குறைப்பு! பிரபல வங்கி அறிவிப்பு!

அதன்படி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதந்தோறும் 900 ரூபாயும், 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி உற்றவர்களுக்கு 600 ரூபாயும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1200 ரூபாயும் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் 1800 ரூபாயும் 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சலுகை உள்ளது. அதாவது அவர்கள் அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் முடிவடைந்திருந்தாலே போதுமானது. மாற்றுத்திறனாளிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மாதந்தோறும் ரூ.1800, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ.2250 பட்டப்படிப்பு முடித்திருந்தால் 3000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு கிடையாது.

தமிழகத்தில் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, மிகைப்பணி ஊதியம் – முதல்வருக்கு நன்றி!

வேலைவாய்ப்பற்றோர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பினால் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2021 செப்டம்பர் 30ம் தேதியுடன் வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்து குறைந்தபட்சம் 5 ஆண்டு நிறைவானவர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் உதவித்தொகை பெற விரும்புவோர் tnvelaivaaippu.gov.in இணையதளம் அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!