புதிதாக வீடு கட்ட திட்டமிடுவோர் கவனத்திற்கு – வீட்டுக்கடன் வட்டி குறைப்பு! பிரபல வங்கி அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பொதுத்துறை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சிறந்த சலுகைகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடனில் 5% வட்டியை குறைத்துள்ளது.
வட்டி குறைப்பு:
நாடு முழுவதும் கடந்த நவம்பர் 1ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே அனைத்து நிறுவனங்களும் சிறந்த சலுகைகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் பல்வேறு சிறந்த திட்டங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி வீட்டுக்கடன் வட்டியை குறைத்துள்ளது. இதுவரை 6.55% வட்டி வீதத்தில் வழங்கப்பட்ட வீட்டுக்கடன் தொகை வட்டியில் 5% வட்டியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, மிகைப்பணி ஊதியம் – முதல்வருக்கு நன்றி!
இந்த வட்டி குறைப்பானது நாளை மறுநாள் அதாவது நவ.8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறதாக தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட 6.80% வட்டி வீதத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி 6.55% ஆக குறைத்து இந்த பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீண்டும் 6.55% வட்டி வீதத்தில் இருந்து 5% குறைத்து 6.50% ஆக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நவம்பர் 8 ஆம் தேதி முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6.50 சதவீதம் முதல் வீட்டுக் கடன்களை வாங்கலாம்.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நவ.8ம் தேதி பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
அதுமட்டுமல்லாமல் 6.65 சதவீதம் வட்டி முதல் கார் கடன்களை வாங்கலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் முன்பை விட தற்போது வாடிக்கையாளர்கள் நலன் கருதி குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்குவதாக இந்த பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த தீபாவளி சலுகையான வட்டி குறைப்பு மகிழ்ச்சி தரும் செய்தியாக மாறியுள்ளது.