தமிழகத்தில் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, மிகைப்பணி ஊதியம் – முதல்வருக்கு நன்றி!

0
தமிழகத்தில் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, மிகைப்பணி ஊதியம் - முதல்வருக்கு நன்றி!
தமிழகத்தில் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, மிகைப்பணி ஊதியம் - முதல்வருக்கு நன்றி!
தமிழகத்தில் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, மிகைப்பணி ஊதியம் – முதல்வருக்கு நன்றி!

தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டு அதிகாரபூர்வ அரசாணை வெளியிடப்பட்டது. காவல்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் முக ஸ்டாலினுக்கு காவல்துறை தனது நன்றியை தெரிவித்துள்ளது.

வார விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் காவலர்களின் பணி இன்றியமையாததாகும். கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கினர். ஆனால் காவலர்கள் தொற்று பரவும் அச்சத்திலும் தொடர்ந்து காவல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஏராளமான காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இரவு, பகல் பாராது பணி செய்து உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டனர். விடுமுறையை இல்லாத துறை என்றால் அது காவல்துறை தான். இந்த நிலையில் காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுப்பு வழங்க வேண்டும் என்று காவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நவ.8ம் தேதி பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

அதனை நிறைவேற்றும் வகையில் கடந்த ஜூலை மாதம் டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களுக்கு ஓய்வுக்காக வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். காவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌ நலனைப் பேணிக் கொள்ள ஏதுவாகவும்‌, காவலர்கள்‌ தங்களது குடும்பத்தாருடன்‌ போதிய நேரம் ‌செலவிடுவதற்கும்‌, வாரத்தில்‌ ஒரு நாள்‌ வாராந்திர ஓய்வு அளிக்கப்பட வேண்டும் ஒரு நாள் விடுப்பு அளிப்பதால் காவலர்கள் மன அழுத்தம் இன்றியும் புத்துணர்வுடனும் தங்களது பணியை தொடர முடியும் என்று தெரிவித்தார். விடுப்பு எடுக்காத காவலர்கள் விடுமுறை நாளிலும் பணி செய்தல் மிகை ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோருக்கு முக்கிய அறிவிப்பு – நவ.14 மெகா முகாம்!

அதன்படி வார ஓய்வு குறித்து கடந்த 3ம் தேதி அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து வாரத்தில் ஒரு நாள் விடுப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு காவல்துறையினர் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். காவலர்களுக்கு விடுப்பு வேண்டும் என்று காவல்துறையின் நீண்ட நாள் அது தற்போது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. இந்த உத்தரவை பிறப்பித்துள்ள தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு காவல்துறை நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!