தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தரமற்ற பொங்கல் பரிசுத்தொகுப்பு!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பில், தரமற்ற பொருட்கள் இருப்பதாக ரேஷன் அட்டைதாரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் இருப்பவர்களுக்கு இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக அரசு 1,088 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் ரொக்கப்பணம் குறித்து எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை.
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இது மக்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சியில் ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் இந்த நேரத்தில் கடந்த 4ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகிக்கப்பட்டு வருகிறது. டோக்கன் அடிப்படியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பிறகு பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.\
தமிழகத்தில் ஞாயிற்று கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!
மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் மற்றும் குடும்ப அட்டையை காண்பித்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் அரசு வழங்கும் 21 பொருட்களில் ஒருசில பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாக ரேஷன் அட்டைதாரர்கள் புகார் தெரிவிக்கினற்னர். ஏலக்காய், முந்திரி போன்ற பொருட்களின் எடை சரியாக இல்லை. சிலருக்கு 21வகை பொருட்களும் முழுவதுமாக வழங்கப்படவில்லை, எண்ணிக்கை குறைவாக உள்ளது. கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களில் வண்டு இருப்பதாகவும், வெல்லம் தரமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.