SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – இதை தொட்டால் பணம் பறிபோகும்!
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வங்கி தொடர்பான சேவைகளை செய்து வருகிறது. தற்போது மின்னஞ்சல் மூலமாக நடக்கும் இணைய மோசடிகள் குறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
SBI வங்கி
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனம் 44 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக நடக்கும் இணைய மோசடிகள் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது, ஃபிஷிங் என்பது போலி மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், லிங்க் உள்ளிட்டவை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் இருந்து வந்ததை போன்று இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – விரைவில் ஸ்மார்ட் கார்டுகள்!
இதற்கு பிராண்ட் ஸ்பூஃபிங் என்ற மற்றொரு பெயரும் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தெரியாத மின்னஞ்சல் முகவரி மூலம் பெறப்பட்ட எந்த லிங்கையும் வாடிக்கையாளர்கள் கிளிக் செய்ய வேண்டாம். ஏனெனில் இதில் தீங்கு விளைவிக்கும் குறியீடு இருக்கலாம் அல்லது ஃபிஷிங் முயற்சியாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மின்னஞ்சல் மூலமாக கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் அனுப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மின்னஞ்சல் மூலமாக அனுப்பினால் தங்கள் கணக்கில் உள்ள பணம் முழுவதும் திருடப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் யாரும் சந்தேகமாக தோன்றும் மின்னஞ்சலைப் பெற்றால் அதற்கு பதிலளிக்க வேண்டாம். அத்துடன் வாடிக்கையாளர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அளிக்கலாம் என்றும் SBI வங்கி தெரிவித்துள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.