தமிழகத்தில் SBI வங்கி ATM களில் பணம் எடுக்க தடை – மோசடி எதிரொலி!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அவ்வங்கியின் ATM களில் பண பரிமாற்ற செயல்பாடுகளை தற்காலிகமாக தடை செய்து நிறுத்தி வைத்துள்ளது.
ATM சேவைகள்:
இந்தியாவில் வங்கி ATM இயந்திரங்கள் மூலம் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அதாவது வங்கிகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறபோதும், இந்த கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை உட்பட 19 இடங்களில் செயல்பட்டு வந்த ATM இயந்திரங்களில் நூதன முறை மூலம் சுமார் 48 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்? மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!
இந்த நிகழ்வு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் இவற்றை தடுக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, ATM சேவைகளை தற்காலிகமாக நிறுத்த SBI வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதனால் SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி ATM இயந்திரங்களில் பணம் எடுக்க முடியாது. இது குறித்த தகவலை இந்த வார துவக்கத்தில், சம்பந்தப்பட்ட வங்கி ATM மையங்களில் சுவரொட்டிகள் மூலம் வெளியிடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதாவது, சில தொழில்நுட்ப பிழை காரணமாக பணம் செலுத்தும் இயந்திரங்களை (CDM) பயன்படுத்த முடியாது. ஆனால் CDM இயந்திரங்களுக்கு பதிலாக பணத்தை திரும்பப் பெற ATM களை பயன்படுத்துமாறு SBI வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது பணம் எடுப்பதற்கு ATM கள் உபயோகத்தில் இருக்காது என SBI வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா தெரிவித்துள்ளார். மேலும் சிக்கல்களைக் கொண்ட அனைத்து இயந்திரங்களையும் முடக்கியுள்ளதால் ATM கள் இயங்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.