ரூ.50 லட்சம் விபத்து காப்பீடு வழங்கும் SBI வங்கி – ‘இந்த’ கணக்கு மட்டும் போதும்!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சம்பள கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு தொகை வழங்குவது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து காப்பீடு தொகை:
பொதுமக்கள் அனைவரும் பொதுவாக தங்களின் எதிர்கால வாழ்விற்காகவும், குடும்பத்தாரின் நலனை கருத்தில் கொண்டும் காப்பீடு திட்டங்களை எடுத்துக் கொள்வது உகந்ததாகும். அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சம்பள கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு தொகை ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பள கணக்கு வைத்துள்ள அனைவரும் இந்த பலனை அனுபவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். சம்பள கணக்கு இல்லாத நபர்கள் விபத்து காப்பீடு திட்ட தொகை கணக்கிற்கு ரூபாய் 1000 ஆண்டுதோறும் செலுத்தினால் காப்பீடு தொகையாக ரூபாய் 20 லட்சம் வழங்கப்படும்.
ரூ. 6000 நிவாரணத்தொகை வழங்கும் பணி தீவிரம் – டிச.14 முதல் டோக்கன் விநியோகம்!
சமீபத்தில் தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான யோகேஷ் குமார் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். அவரது விபத்து காப்பீடு தொகை ரூபாய் 50 லட்சத்திற்கான காசோலை அவரது தாயாரிடம் வங்கி அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இது போன்ற மிகவும் பெரிய அளவிலான பலன்களை தரக்கூடிய விபத்து காப்பீடு திட்டத்தில் SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் இணைந்து பயன்பெற வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.