‘தகைசால் தமிழர்’ விருதுக்கு என்.சங்கரைய்யா தேர்வு – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் நடப்பாண்டு முதல் சுதந்திர தின விழாவில் முதல்வர் கையால் வழங்க இருக்கும் தகைசால் தமிழர் விருதுக்கு இந்த வருடம் மூத்த தலைவர் என்.சங்கரைய்யா தேர்வு செய்யப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தகைசால் தமிழர்’ விருது:
தமிழகத்தில் தமிழ்மொழியின் பெருமையை மேம்படுத்தும் விதமாக பணியாற்றுபவர்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு தொண்டு செய்பவர்களுக்கு தமிழக அரசு பல விதங்களில் மரியாதை செய்து வருகிறது. அதற்காக இதுவரை பல விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன் தற்போது நடப்பாண்டு முதல் வருடந்தோறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலவரின் கையால் தமிழ்மொழி மேம்பாட்டிற்காகவும், தமிழ் மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்க அரசு முன்னதாக முடிவு செய்திருப்பதாக அறிவித்தது.
கேரளாவில் இன்று +2 தேர்வு முடிவுகள் – ஆன்லைனில் வெளியீடு!
விருதுக்கு தகுதியானவர்களுக்கு விருதுடன், பாராட்டு சான்றிதழ் மற்றும் பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படும். இது தொடர்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விருது வழங்கப்பட இருக்கும் தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக ஒரு குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவினருடன் தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இறுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா அவர்கள் இந்த வருட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
TN Job “FB Group” Join Now
என்.சங்கரய்யா அவர்கள் தனது இளம் வயதிலேயே பொதுவாழ்வில் ஈடுபட்டவர். சுதந்திர போராட்டத்தில் தனது முழு அர்ப்பணிப்புடன் போராடியவர். மாணவர் தலைவராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். நூறு வயதினை அடைந்த மாபெரும் தமிழின தலைவர் என்ற பெருமையை கொண்டவர். இத்தகைய பெருமையுடைய தலைவர் என்.சங்கரய்யா அவர்கள் நடப்பாண்டின் தகைசால் தமிழராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.