முன்னணி நிறுவனத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் – கேள்விக்குறியான ஊழியர்களின் எதிர்காலம்!
அதிகரித்து வரும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக பிரபல நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த 3% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.
பணி நீக்கம்
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஆண்டு முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களின் லாப நோக்கத்திற்காக பணி முடக்கம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட செயல்முறைகளில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு பணி நீக்கங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், Amazon, Google, MicroSoft உள்ளிட்ட நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், Samsung நிறுவனமும் பொருளாதார மந்த நிலை காரணமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் 4ம் காலாண்டில் 204 மில்லியன் டாலர் லாபம் பெற்றது. ஆனால் இது கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 96.9 சதவீதம் லாபம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனால் Samsung நிறுவனம் லாப நோக்கத்தை கருத்தில் கொண்டு செலவினங்களை குறைப்பதற்காக தனது மொத்த ஊழியர்களில் 3% ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக Intel நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.