விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ இல் களமிறங்கும் சாம் விஷால், மாஸ்டர் பட நடிகர் – இறுதி போட்டியாளர்கள் விவரம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியலில் விஜய் டிவி புகழ் சாம் விஷால், பாடகி இசைவாணி, மாஸ்டர் பட நடிகர் ஆகியோர் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியில் மற்றுமொரு பிரமாண்டமான துவக்கத்துடன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்னும் 2 நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சிகள் இன்னும் 3 மாதங்களுக்கு ஒளிபரப்பப்படும். ஏற்கனவே 4 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்திருக்கும் பிக்பாஸ் ஷோவின் 5வது சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் விவரங்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் செய்த சாதனை – மூர்த்தி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!
இதில் விஜய் டிவி பிரபலங்களாகிய குக் வித் கோமாளி கனி, விஜே ஜாக்குலின், பிரியங்கா, நடிகை ஷகிலா மகள் மிலா, திருநங்கை நமீதா, தொழிலதிபர் ரேணுகா பிரவீன், நடிகை பாவனி ரெட்டி, கோபிநாத் ரவி, இமான் அண்ணாச்சி, நிழல்கள் ரவி, ஷாலு ஷம்மு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷாலும் இணைந்திருப்பதாக தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் வெற்றிவாகை சூடிய ஷாம் விஷாலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸை பின்னுக்கு தள்ளிய ரோஜா – TRP ரேட்டிங்!
இப்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இது உண்மை தகவலா என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் கடந்த 2020ம் ஆண்டில் BBC 100 மகளிர் விருதுகளில் கவுரவப்படுத்தப்பட்ட பிரபல கானா இசைப் பாடகி இசைவாணியும் பிக்பாஸ் இறுதிப் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர மாஸ்டர் படத்தில் நடிகர் விஜயின் மாணவராக நடித்திருந்த நடிகர் சிபி புவன சந்திரன் பிக்பாஸ் போட்டியாளராக பங்குபெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. என்றாலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து தெரிந்து கொள்ள இன்னும் 2 நாட்கள் பொறுத்திருந்தால் மட்டுமே போதுமானதாகும்.