இந்திய IT நிறுவன ஊழியர்களுக்கு 9.4% சம்பள உயர்வு – 2022 ஆம் ஆண்டில் திட்டம்!
இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவன (IT) ஊழியர்கள் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக 8.8% சம்பள உயர்வு கண்டுள்ள நிலையில், வரும் 2022 ஆம் ஆண்டிலும் IT ஊழியர்களின் ஊதியம் கணிசமாக 9.4% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் உலகளவில் IT நிறுவனங்களின் சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவை சேர்ந்த சில முன்னணி IT நிறுவனங்கள் புதிய ஊழியர்களை அதிகளவில் பணியமர்த்தி வருகிறது. இதனுடன் புதிய ஊழியர்களை ஈர்க்கும் வகையிலும், மூத்த ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலும் ஊதிய உயர்வுகளை பல முறை அதிகரித்து வருகிறது.
தமிழக மின்சார வாரியத்தின் கடன் ரூ.1. 34 லட்சம் கோடி – அரசு அறிவிப்பு!
அந்த வகையில் இந்தியாவில் உள்ள IT நிறுவன ஊழியர்கள் வரும் 2022 ஆம் நிதியாண்டில் 9.4% என்ற அளவில் சராசரியான சம்பள உயர்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக Aon இன் 26 வது வருடாந்திர சம்பள உயர்வு கணக்கெடுப்பின்படி, IT ஊழியர்களின் இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு சராசரியாக 8.8 சதவீதத்திலிருந்து, 2022 ஆம் ஆண்டில் 9.4 சதவீதமாக உயரும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு 39 வெவ்வேறு துறைகளில் 1,350 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், வரும் 2022 ஆண்டுக்குள் 98.9 சதவிகித நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை கொடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது. கணக்கெடுப்பின்படி, IT நிறுவனங்கள் சராசரியாக 11.2% உயர்வுடன் முன்னணி ஊதியதாரராக இருக்கும். அதைத் தொடர்ந்து தொழில்முறை சேவைகள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 10.6% ஊதியத்தை அளிக்கும். ரியல் எஸ்டேட் போன்ற நிறுவனங்களும் 8.8% உயர்வு வழங்கலாம்.
மேலும் உணவுத்துறையும் 7.9% உயர்வை அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் கீழ் வரும் 2022 ஆம் ஆண்டில் இந்திய ஊழியர்களுக்கு அதிகளவு சம்பள உயர்வு அளிக்க திட்டமிடப்பட்ட முதல் மூன்று துறைகளில் தொழில்நுட்பம், இ-காமர்ஸ் மற்றும் IT சம்பந்தமான சேவை நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து விருந்தோம்பல், பொறியியல் சேவைகள் மற்றும் எரிசக்தி ஆகியவை 2022 ஆம் ஆண்டிற்கான மிகக் குறைந்த சம்பள உயர்வு கொண்ட துறைகளாக கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாம் அலை தொடங்கி விட்டது – அமைச்சர் தகவல்!
‘பெரும்பாலான இந்திய நிறுவனங்கள், பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற துறைகளில் வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது. அதே நேரத்தில் தங்கள் தொழில்களை முன்னெடுத்து செல்ல டிஜிட்டல் திறன்களில் முதலீடு செய்கின்றன. அதன் மூலம் தான் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் உள்ள ஊழியர்கள் மிக உயர்ந்த சம்பள உயர்வை பெறுகிறார்கள். இது காலப்போக்கில் உயர்வடையும்’ என்று அயோனின் மூலதன வணிக பங்குதாரர் ரூபனின் சவுத்ரி தெரிவித்துள்ளார்.