மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படியை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதனால் வீட்டு வாடகை படியை உயர்த்துவதற்கு ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 11.56 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதங்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது அகவிலைப்படி வழங்கப்படவில்லை. அதன் பிறகு கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்த பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிப்பது கலந்தாலோசனை நடைபெற்றது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு 28% ஆக அதிகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அண்மையில் மீண்டும் 3% உயர்த்தப்பட்டு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
டிசம்பர் மாதத்தில் இன்னும் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 68.62 லட்சம் ஓய்வூதியதாரா்களும் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கான பயணப் படியும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்ததாக மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப் படியை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வந்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல், பொதுமுடக்கம்? ஓமைக்ரான் அச்சுறுத்தல்! அமைச்சர் விளக்கம்!
வீட்டு வாடகை படி உயர்வு குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே வீட்டு வாடகை படியை உயர்த்துவது குறித்த முன்மொழிதல் ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜனவரி மாதம் முதல் வீட்டு வாடகை படியை உயர்த்தும்படி அரசிடம் ரயில்வே ஊழியர் சங்கங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனால் விரைவில் வீட்டு வாடகை படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாடகைப்படி உயர்வால் சுமார் 11.56 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும்.