‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சாய் காயத்ரி அம்மாவுடன் வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ஐஸ்வர்யா கதாபாத்திரம் மூலம் மக்களை மகிழ்வித்து வரும் நடிகை சாய் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் விடியோவை பதிவிட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ரீல்ஸ் வீடியோ
சுமூகமாக சென்று கொண்டிருந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை தடுத்து நிறுத்தி சில பிரச்சனைகளை உருவாக்கி இருக்கும் ஒரு முக்கிய கதாப்பாத்திரம் ஐஸ்வர்யா தான். இதுவரை சிறிய சண்டை, சச்சரவுகளை மட்டுமே சந்தித்து வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் இருந்து தம்பி கண்ணனை பிரித்து விடும் அளவுக்கு நடைபெற்ற எல்லா நிகழ்வுகளுக்கும் அடித்தளமாக இருக்கும் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக ஐஸ்வர்யா ரோல் பார்க்கப்படுகிறது.
‘பாரதி கண்ணம்மா’ ரோஷினிக்கு சீரியல் குழு அளித்த சர்ப்ரைஸ் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இந்த சீரியலில் ஏற்பட்ட பல்வேறு திருப்பங்களும் இந்த ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து தான் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் திருப்புமுனையான ஐஸ்வர்யா ரோலில் நடித்து வருபவர் நடிகை சாய் காயத்ரி. விஜய் டிவியின் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலுக்கு பிறகு தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இல் நடித்து வரும் சாய் காயத்ரி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகும் ஆலியா மானசா? ரசிகர்கள் ஷாக்!
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சீரியல் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் பிரபலமான வசனம் ஒன்றை பேசி நடிகை சாய் காயத்ரி புதிதாக ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.