விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகும் ஆலியா மானசா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சீரியல்களில் இருந்து தொடர்ந்து முன்னணி நடிகர், நடிகைகள் விலக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதால் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஆலியா மானசா விலக இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ராஜா ராணி 2:
விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் ரீல் ஜோடியாக அறிமுகமாகி அதன் பின் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சஞ்சய், ஆலியா மனசா ஜோடி. இவர்களுக்கு செம கியூட்டாக அய்லா என்ற மகள் இருக்கிறார். பிரசவத்திற்கு பின் தனது உடல் எடையை குறைத்து செம பிட்டாக சீரியலில் களமிறங்கிய ஆலியா, விஜய் டிவியில் ராஜா ரணி 2 சீரியலில் நடித்து வருகிறார். அதில் மிகவும் போல்டான கதாபாத்திரமாக நடித்து வரும் அவர், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்.
விஜய் டிவியில் ‘சிங்கப்பெண்ணே’ என்ற புத்தம் புதிய ஷோ ஒளிபரப்பு – அம்மாவுடன் கலந்து கொண்ட தனம்!
ஆனால் அதற்கு தடையாக அவருடைய மாமியார் சிவகாமி இருக்கிறார். அதில் இருந்து எப்படி அவர் தன்னுடைய கனவை நினைவாக்குவார் என்பதே கதையாக இருக்கிறது. இந்நிலையில் ஆலியாவின் கணவர் சஞ்சய் சன் டிவியில் கயல் என்று புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரமோஷனுக்காக இன்ஸ்டாகிராமில் லைவ்வில் வந்த சஞ்சீவ், ஆலியா மானசா இரண்டாவது முறையாக அம்மாவாக போகிறார் என்பதை சஸ்பென்சாக சொல்லியிருந்தார். இதைக் கேட்ட அவரது ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சோகத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு, தேம்பி தேம்பி அழும் ஸ்ருதி & பாவனி – வெளியான 3வது ப்ரோமோ!
அதைப் பற்றி ஓபனாக சொல்லாமல் அவர் ஆலியா சாப்பிடும் போது நல்லா சாப்பிடுங்க அப்பதான், அய்லா மாதிரி ஒரு லைலா வரும் என்று பேசி பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளனர். அதனால் அவர் ராஜா ராணி 2 சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஏற்கனவே பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி சீரியலில் இருந்து விலக இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து இவரும் சீரியலில் இருந்து விலக இருப்பதால் விஜய் டிவி சீரியல் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.