குழந்தைகள் இன்டர்நெட் -ஐ பயன்படுத்தும் பாதுகாப்பான வழிமுறைகள் – கூகுளின் புதிய வசதி!
கூகுள் நிறுவனம் தற்போது குழந்தைகள் பாதுகாப்பான முறையில் இணையத்தை பயன்படுத்தும் முறைகள் குறித்து எட்டு மொழிகளில் வெளியிட உள்ளது.
வழிமுறைகள்:
தற்போதைய காலத்தில் இணைய வசதி அனைவரும் பயன்படுத்தும் அத்தியாவசியமாகி விட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இது போன்ற சூழ்நிலைகளை பயன்படுத்தி பல நூதன மோசடிகளும் நடந்து வருகின்றது. பணம், பொருள் திருட்டை விட ஒருவரின் தகவலை திருடுவது தற்போது மிகவும் மோசமாக நடந்து வருகிறது. இது போல் பல சம்பவங்கள் கூகுள் தளத்தில் நடந்து வருகிறது.
டிக்டாக் சூர்யாதேவி தற்கொலை வீடியோ; ஃபேனில் தொங்கிய தூக்கு கயிறு – போலீசார் கடும் அதிர்ச்சி!
இன்டர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவையான தகவல்களை, கூகுள் இணையதளத்தில் தேடுகின்றனர். இணையத்தில் சரியான தகவல்கள் கிடைப்பதுடன், பொய்யான, போலியான தகவல்களும் அதிகளவில் இடம் பெறுகின்றது. மேலும் பயன்படுத்துவோரின் தகவல்களும் திருடப்படுகின்றது. இதனை கவனித்து வந்த கூகுள் நிறுவனம் தன் இணையதளத்தில், பாதுகாப்பு மையம் ஒன்றை அமைத்து உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில், பாதுகாப்பான முறையில் இணையத்தை குழந்தைகள் பயன்படுத்துவது குறித்து தகவல்களை வழங்க உள்ளது. இத்திட்டம், இந்தியாவிலும் இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது, மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி ஆகிய எட்டு மொழிகளில் பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் குழந்தைகள் விளையாட்டுடன் விவரங்களை கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தப்பட்டுள்ளது.