சபரிமலை கோவில் நடை நவம்பர் 15 இல் திறப்பு – பக்தர்களுக்கு ‘இது’ கட்டாயம்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ஆம் தேதி மாலை திறக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் மற்றும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சபரிமலை:
கேரளாவில் கொரோனா இரண்டாம் பரவல் காரணமாக கடந்த மாதம் ஏப்ரல் முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டது. ஆனாலும் கோவில் ஊழியர்கள் மூலம் சுவாமிக்கு தினசரி பூஜைகள், சடங்குகள் ஆகியவை பக்தர்கள் அனுமதியின்றி வழக்கம் போல் நடத்தப்பட்டது. மாதாந்திர பூஜைகளுக்காக மட்டும் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.12000 முதலீடு, ரூ.1.03 கோடி வரை ரிட்டன்ஸ்!
தற்போது கேரளாவில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து மாதாந்திர பூஜைகளுக்கு முன்பதிவு டிக்கெட் மூலம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15 ஆம் தேதி மாலை திறக்கப்பட உள்ளது. மண்டல பூஜையானது டிசம்பர் 26ம் தேதி வரை நடைபெறும். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு வரும் 15 ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1 துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – நவ.9 ரிசல்ட்!
தினமும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் முழுமையாக குறையாத காரணத்தால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மேலும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உடன் வைத்திருக்க வேண்டும் என்று சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.