![IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பயிற்சியில் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட்! IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - பயிற்சியில் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட்!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/03/IPL-சீசன்-15-3.jpg)
IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பயிற்சியில் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட்!
தற்போது கேப்டன் MS தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியினர் சூரத்தில் பயிற்சி ஆட்டத்தை மேற்கொண்டு வரும் நிலையில், 25 வயதான தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தனது அணியில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆல்-ரவுண்டர் தீபக் சாஹர் ஆகிய இரு முக்கிய வீரர்களின் காயத்துடன் போராடி வருகிறது. தற்போது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் CSK அணி, வரும் மார்ச் 26ம் தேதியன்று தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்கொள்கிறது. அந்த வகையில் IPL போட்டிகள் துவங்க இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில் காயத்தால் பாதிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் சாஹர் இருவரும் எப்போது CSK அணியில் இணைவார்கள் என்று பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்தது.
மாநில அரசு ஊழியர்களுக்கு அரைநாள் சிறப்பு விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
இந்த நிலையில் சூரத்தில் நடைபெற்று வரும் சீசனுக்கு முந்தைய பயிற்சி முகாமில் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்திருப்பதாக அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக 25 வயதான தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமடைந்து விட்டதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அந்த வகையில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு முகாமில் கலந்து கொண்டிருந்த அவர் தற்போது CSK அணியில் இணைந்திருக்கிறார்.
கடந்த 2021 IPL சீசனில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பேட்டராக மட்டும் இல்லாமல், 635 ரன்களை அடித்து ஆரஞ்சு கேப் ஹோல்டராக இருந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், CSK அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக ஐபிஎல் 2022 போட்டிகளின் முதல் பாதியை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய அறிவிப்புகளின் படி, தீபக் சாஹர் இன்னும் எட்டு வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
CSK முழு அணி:
ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, மகேஷ் தீக்ஷனா, ராஜ்வர்தன் சம்ஹர்ஜெட்கர், டி. கான்வே, டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், சுப்ரான்சு சேனாபதி, ஆடம் மில்னே, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான், கே பகத் வர்மா.