8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை – மாதம் ரூ.62,000 ஊதியம்.. நேர்காணல் மட்டுமே!
மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதில் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மொத்தமுள்ள 5 ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஜன.05ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!
Follow our Instagram for more Latest Updates
இத்தகைய தகுதி பெற்றவர்கள் www.mayiladuthurai.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதனை முழுமையாக பூர்த்தி செய்து ரூ.30 அஞ்சல் வில்லை ஒட்டி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம்(வளர்ச்சி பிரிவு), ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முதல்தளம், மயிலாடுதுறை – 609 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 19,500 – ரூ. 62,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.