தமிழகத்தில் ஜூலை 5 முதல் RTE மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் பதிவேற்றம்!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2021-22ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கட்டாய கல்வி உரிமை சட்டம்:
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஏழை, எளிய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு தகுதியுடைய மாணவர்களுக்கு 8ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்படும் மாணவர்களுகான முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது.
ஜாக்டோ ஜியோ போராட்ட நடவடிக்கைகள் ரத்து – பள்ளிக் கல்வித்துறை ஆணையர் செயல்முறைகள்!
தற்போது தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. அதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதே போல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எல்.கே.ஜி சேர்க்கைக்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விவரங்களை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
வட்டார கல்வி இயக்க அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் மேலும் அதற்கான விண்ணப்பத்தை ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எல்.கே.ஜி சேரும் மாணவருக்கு 31.07.2021 அன்று 3 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
- பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
- தேர்தெடுக்கப்படும் பள்ளி மாணவரின் இருப்பிடத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இருக்க வேண்டும்.
- பிறப்பு சான்றிதழ், வருமான சான்று, சாதி சான்று, மருத்துவமனை சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் அவசியமாகும்.